Monday, March 17, 2008

பிரபலங்களின் விமர்சனம் : இந்த 'வியாதிக்கு' மருந்து கண்டுபிடிக்கவில்லை.

மூன்று வயதில் ஞானப்பால் குடித்து பாடினாராம் சம்பந்தர், இங்கு பிரபல எழுத்தாளன் என்ற போர்வையில் மனப்பால் குடித்துக் கொண்டு எவரையும் இகழமுடியும் என்பதை ஓனான்கள் கூட மெய்பித்து வருகின்றன.

முதலில் பிரபல எழுத்தாளன் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். நீ நீங்கள் ஒரு எழுத்தாளன் என்றால் எங்கேயோ படித்த 100 புத்தகங்ளின் மேட்டர்களை உங்கள் மொழிக்கு மாற்றி உங்களால் எழுத்தப்பட்டவையாக ஒரு பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு அல்லக்கைகளை தயார் செய்து, இவை எல்லாம் ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்டவை, பின்னவினத்துவமும் பினாயிலும் கலந்து எழுதப்பட்ட இத்தகைய சிலாக்கியங்கள் இதுவரை தமிழ் புதினாவில் வந்ததில்லை என்று அல்லக்கைகளை வைத்து ஊடகங்கள் தோறும் வதந்தி (வாந்தி அல்ல) எடுக்க வேண்டும். அதன் பிறகு நீ, நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளன் தான்

அதாவது "ஆகா, அவரது எழுத்துக்களைப் பார்த்தீர்களா ? ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும், அரேபியாவில் ஷேக்குகளும் படைக்கும் இலக்கியங்களெல்லாம் ஒத்தை ஆளாக நின்று படைத்துக் கொண்டு தமிழுக்கு தாடியாக ஆக்கி வைத்திருக்கிறார். இவரல்லவோ எழுத்தாளர். மற்றவர்கள் எல்லாம் எழுதுவது இலக்கியமா, பேனா பிடிப்பவன் எல்லாம் எழுத்தாளானா ? மாற்றி கொள்ளுங்கள் ஐயா, மாற்றிக் கொள்ளுங்கள். நவீனம், பெளதீகம்
இதெல்லாம் கலந்தும், கக்கா போவதிலும் வெரைட்டி கண்டுபிடித்து அதை கதையில் திணிக்க வேண்டும் அவனே எழுத்தாளன். அப்படி எழுதும் ஒரே எழுத்தாளுமையாளன் எங்கள் சோ அண்ட் 'சோவின்' வகையறா ஆளுதான் தான் என்று பரப்பிவிடவேண்டும்.

அப்படி ஒரு கூட்டம் சேர்த்துவிட்டால் அந்த எழுத்தாளான் தான் ஒரு பிரபலம் என்ற போர்வையில் எவர் மீது வேண்டுமானாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி என்று குறிப்பு கொடுத்து சிறுகதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க வேண்டுமா ?

"ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தேன், ஆழயோசித்தேன்...அந்த நேரத்தில் தலைக்கு மேல் காக்காய்..." என்று ஆரம்பித்து கோவணத்தை இறுக்கி முடிந்து கொண்டு எழுதுங்கள், உங்கள் பெயர் ஒரே வார இதழ்மூலம் பிரபலமாகிவிடும் என்று குறிப்பு எழுதி கிண்டல் அடிக்கலாம்

புதுக்கவிதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க,

"மூளையைக் கசக்கினேன்,
மூக்கில் ஒழுகியது - அறிவூற்று
முக்கிப் பார்க்கும் போது
மூச்சை அடைத்தது - துர்நாற்றம்
"


சூப்பர் கவிதை, இதுப்போல் எழுதினால் போதும், கூடவே இயலாமை, புண்ணாக்கு, தலித்தியம், நாரசம், நரமாமிசம் எல்லாம் சேர்த்துக் கொண்டால் புதுசு புதுசு புதுக்கவிதைதான்

பின்பு

தொடர்கதை எழுத்தாளர்களை எப்படி கிண்டல் அடிப்பது,

"அவள் அவனைப் பார்த்தாள், அவன் அவளின் தொடையைப் பார்த்தான்..." தொடர்கதையை இப்படித்தானே தொடங்க வேண்டும்.

ஐயா சாமி தாவு தீறுதா?......பிரபலமெல்லாம் இப்படித்தான் வளரும் எழுத்தாளர்களை விமர்சனம் செய்யனும்

இந்த பிரபல எழுத்தாளர்களெல்லாம் முலைப்பால் குடித்தவுட்டு முக்கி விழுவது கூட எழுத்தாக மாறி புதினம் படைக்கிறதாம். மற்றவர்கள் எல்லோரும் மண்டிபோட்டு மண்டையை உடைத்து எழுதுறாங்க, போங்கடா நீங்களும் உங்க விசம விமர்சனங்களும்.

இதுக்கும் ஜெமோ எழுதிய நீங்களும் புதுக்கழுதை வளர்க்கலாம் என்பதற்கும் சம்பந்தம் இல்லை

Wednesday, March 12, 2008

என் கூட்டாளி தாத்தாச்சாரியார் - சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும்

வயசானவர்களுக்கு யார் நண்பராக இருக்க முடியும்? என் பால்ய சினேகிதன் தாத்தாசாரியார், தில்லை அந்தணர்களை அம்பலத்தில் ஏற்றி இருக்கார் பாருங்க.

'போலீஸாரையும் தேவாரம் பாட வந்த ஓதுவார்களை யும் நெய்யையும் எண்ணெயையும் வாரி ஊற்றி ஓடஓட விரட்டிய இந்தத் தீட்சிதர்கள் யார்?' என்று வேத மேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார்,

வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம், வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை, அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு, 'வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்'னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால்,

இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட வர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் 'ஒரிஜினல் பிராமணர்கள்' என்ற எண்ணம் உண்டு.

இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டு மல்ல, ஆவுடையார்கோயில், காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால், அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை.

வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால், வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.

வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள், ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 'வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?' என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?

சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கிய மானது. ஆனால், வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் 'ஆகாச லிங்கமாக' இருப்பதாக... அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர். லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். 'நடராஜ மகாத்மியம்' என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில், 'சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு, ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு, நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.

அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய், 'தில்லைவாழ் அந்தணர்கள்'னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ...'' என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார்.

நன்றி:
கட்டுரை : ஜூனியர் விகடன் 12/மார்/2008
படம் : anyindian

Thursday, March 6, 2008

சுஜாதா மறைவு பாரதிக்கு இழப்பு !

தமிழ் என்றாலே 21 ஆம் நூற்றாண்டில் நினைவுக்கு வரும் பெயர் பாரதி, பாரதிப் போல் புலவன் இல்லை. பார்த்தனைப் போல் வீரன் இல்லை. அப்படிப்பட்ட பாரதிக்கு உலகம் தோறும் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறார்கள். பாரதி சங்கம் இல்லாத நாடே இல்லை.

கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகை தன் எழுத்தாற்றலால் கட்டிப் போட்ட ஒரே எழுத்தாளர் சுஜாதா மட்டுமே, மற்றவர்கள் எல்லோரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எழுதினார்கள். சுஜாதா மட்டுமே அவரது எழுத்தால் அடையாளம் காணப்பட்டார், பின்பு அவரது அடையாளமே இலக்கியம் என ஆயிற்று.

உலக தமிழார்வளர்கள் அனைவரும் பாரதி தமிழ்ச் சங்கம் போல், சுஜாதா அவர்களின் பெயரிலும் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து தமிழை வளர்க்கலாம். ஒரே ஒரு கஷ்டம் தான் பாரதி சங்கம் பாதியாக குறைந்து போகும். உவேசா ஐயர் முதல் - பாலச்சந்தர், எஸ்வேஷேகர் வரை பார்பனர்களின் தமிழ்ச் சேவை மிகப் பெரியது.

வாழ்க பாரதி புகழ் ! வாழ்க சுஜாதா அவர்களின் புகழ் !

Sunday, February 24, 2008

2007ன் சிறந்த வலைப்பதிவாளர்.

2007ல் மொக்கை மன்னர்கள் கோலோச்சினார்கள், சுப்புடுவாகிய நான் 2006ல் இருந்தே பதிவுகளை படித்துவருகிறேன். இருங்க, 2006ல் ஸ்டார் பதிவர் யார் என்று தெரியுமா ? தெரிஞ்சா பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை. 2007ல் ஏன் ஸ்டார் பதிவர் செலக்சன் நடக்கவில்லை. காரணம் இருக்கு. ஒரு பதிவர் ஸ்டார் பதிவர் ஆக அடிப்படை தகுதி என்று ஒன்று உண்டு, அதன் படி அவர் போலிக்கு தெரிந்தவனாக இருக்கனும்ம், தெரிஞ்சவனாக இருந்தால் மட்டும் போதாது, போலிக்கு சக பதிவர்களின் மனைவி மகளைப் பற்றி ஆபாசமாக எழுதித் தரனும், அதையும் அலுவலக முகவரியில் இருந்தே தந்திருந்து அந்த சான்றிதழை போலி அவன் பதிவில் வெளி இடனும், அதன் பிறகுதான் ஸ்டார் பதிவர் அறிப்பை செய்ய முடியும், இதெல்லாம் இல்லாமலே ஒருவர் ஸ்டார் பதிவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாரே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் போலிக்கு அல்லக்கையாக செயல்பட்டார் என்ற முதல் தகுதியே சிறப்பு தகுதியாக கருதி ஸ்டார் அவார்டு வாங்கிட்டார். 2007க்கு யாருக்கு கொடுப்பது ?

2007ல் போலி எங்க போனான் என்றே தெரியல, அப்பறம் எப்படி அவனுக்கு அல்லக்கையாக செயல்பட முடியும்? எனவே 2007ன் சிறந்த ஸ்டார் பதிவர் யாரும் இல்லை.

போலி அண்ணா, திரும்ப வாங்க 2008ல் யாருக்காவது ஒருவருக்கு ஸ்டார் பதிவர் அவார்டு கொடுகணும்

Monday, February 4, 2008

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு....

இந்திய தேசிய அரசு ஒரு உத்தரவுப் போட்டா, அதை மதிச்சு நடக்கிறது தானே மாநில அரசாங்கத்தின் வேலை. நடுவன் அரசு, எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதில் ஒரு சிறிய மாற்றம் செய்திருக்கிறது. அதை அப்படி மதித்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக, இந்த திராவிட திம்மிகள் தவ்வுகிறது.

அப்படி என்ன பெரிசா மாறுதல் செஞ்சிட்டா. அட்டவனை சாதி மக்களுக்கு, கல்லூரியில் நுழைந்துப் படித்தாலே, உதவித் தொகை என்று இருந்ததை, 60% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, உதவித் தொகை என்று மாற்றியமைச்சியிருக்கா. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறதேப் பெரிசு. 60% என்று சொன்னால் தானே படிப்பார்கள். இல்லாவிடில் படிக்காமல் பணம் மட்டும் பெற்று சும்மாயிருப்பர்கள் அல்லவா.

அதுவுமில்லாமல், சிறப்பு தகுதிகள் இல்லையே. உன்மையான மைனாரிட்டியாக ( அதாவது 3% மொத்த ஜனத்தொகையில் ) இருந்தால் தானே அது கொடுக்கப்படனும்.
அதில் ஒரு உள்ளார்ந்த உன்னதமான நோக்கம் இருக்கு என்பது தமிழகத்தின் நிரந்திர தலைவலி, ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் தெரியும். காங்கிரஸ்காரா எல்லாம், அவ அவா சண்டையில் மும்மரமா இருக்கா. அதுனாலே, அவ வழக்கம் போல ஒதுங்கிடுவா.
இந்த மாற்றம் அறிவித்தவுடன், உடனடியாக கருணாநிதி, இதை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்று அறிவிக்கிறார். படிக்க வந்துள்ள தாழ்த்தப்பட்டுள்ள சமுதாய மாணவர்களின் கண்களைக் குத்தும் மோசமான முயற்சி என்று வீரமணி சொல்லுறார். வை கோ, மத்திய அரசு, இந்த உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டுகோள் வைக்கிறார். கம்பூனிஸ்ட் கட்சிகள், இது அந்த மக்களுக்கு இழைக்கப்ப்டும் துரோகம் என்று அலறுகிறது.

ஆனால், நம்மாத்து பொம்மனாட்டி, ஜெயலலிதா, அதை எல்லாம், சட்டை செய்யவே இல்லை. அவருக்குத் தெரியும். எது மக்கள் பிரச்சனை. அன்பழகன் உதவிப் பேராசிரியரா, இல்லை பேராசிரியாரா என்பதற்கு விடை கண்டுப்பிடிப்பது தானே முதல் வேலை. அதை விடுத்து, இது மாதிரி விசயங்களில் தலையிடலாமா. இது வரை, ஜெயலலிதா தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதாக யாராவது நிருபிக்க முடியும்மா. முடியாது. அந்த தப்பை அவர்கள் செய்யவே மாட்டார்கள்.

இந்திய இறையான்மைக்கு சவால் விடும், கருனாநிதி நடுவன் அரசின் ஆனையயை மதிக்கத் தவறியதற்காக, ஆட்சியயை கலைக்க முடியும்மா என்று யோசித்து வருகிறார். அதனால், அந்த உன்னதமான காரணத்தை, மக்களுக்கு அறிவிக்க முடியாது சூழ்நிலையில் இருக்கிறார். அது நீசர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

ஜெயலலிதா நினனப்பதைச் செய்யும், உலக அறிவாளி சோ, மாரி போல் கருத்துக்களைப் பொழிபவர். அவர் கூடிய விரைவில் தனது கேள்வி பதிலில் இதற்கான சப்பைக் கட்டு, கட்டுவார் என்று எதிர்பாருங்கள்.

Sunday, February 3, 2008

கிச்சு மாமாவுக்கு ஆரிய 'நச்' கேள்விகள்.

கிச்சுமாமா உள்ளங்கையை தேய்து சொல்கிறார், "தேவபாசையும், தமிழும் ஆதிகாலத்து பாஷைகளாம், இரண்டிற்கும் பொதுவான அம்சம் என்பது போல் தேவ ரிஷிகளின் பெயர்கள் இரண்டு பாஷைகளின் பொத்தகங்களிலும் உள்ளதாம், வெள்ளைக்காரன் ஆரியர் திராவிடர் என்று பிரித்து போட்டுவிட்டு பிராமனாளுக்கும், மத்தவாளுக்கும் பேதம் பிரிச்சு வச்சிட்டான்"

மாமாவுக்கு சில கேள்விகள்.

வெள்ளைக்காரன் எத்தனை 'ஆரிய' பவன்களை திறந்து வைத்து பெயர் வைத்தான்?
வெள்ளைக்காரன் எங்கே எப்போது 'ஆரிய' சமாஜ் என்ற பார்பன அமைப்பை தோற்றுவித்தான்?
வெள்ளைக்காரன் சூத்திரவாள் யார் ? ப்ராம்ணவாள் யார் என்று எப்போது பிரித்தான்?
வெள்ளைக்காரன் மனுவை அச்சிட்டு வீடுவிடாக கொடுத்தானா?
வெள்ளைக்காரன் ப்ராம்ணவாள் ப்ரம்மாவின் மூக்கில் இருந்து பிறந்தவராகவும், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவராகவும் எப்போது பிரச்சாரம் செய்தான்?

Tuesday, January 29, 2008

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா? அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், முதலில் தேசாபிமானம் என்றால் என்ன தெரியுமா ?

1. இந்தியா, இந்து இந்துராஷ்டரம் பற்றி தெரிந்த இந்தியராகவும் இந்துவாகவும் இருக்க வேண்டும்.

2. இந்தி வாழ்க, இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாடு தனித்து நின்றுவிட்டது என்ற தேசிய அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

3. மோடி அல்லது அத்வானி போன்ற இந்துக் கடவுள்களின் கலர்படம் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் அல்லது அலுவலக மேசையில் வைத்திருக்க வேண்டும்

4. சமஸ்கிரதம் இந்தியாவின் பொது மொழி என்றும் அது மட்டுமே கோவில் அர்சனைக்கு உபயோகிக்க வேண்டும் என்பதை ஊடகங்கள் வழியாக அது பற்றி தெரியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

5. இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தனித்தனியாக பிரித்து புரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டும், அதற்கு அடிக்கடி நீங்கள் துக்ளக்கும் தினமலரும் படிக்க வேண்டும். குறிப்பாக விடுதலை புலிகள் பற்றி எவரும் ஆதரவாக பேசினால் தேச துரோகி என அவரைப்பற்றி எச்சரிக்கை செய்து இந்திய அரசை விழித்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

6. ஈவெராமசாமி பற்றி தெரிந்திருக்க வேண்டியதில்லை, அவருடைய சாதி நாயக்கர் என்று தெரிந்தாலே போதும்.

7. கருணாநிதியும் கருணாநிதி குடும்பமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக அடிக்கடி பலருக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

8. நாற்பது ஆண்டுகால திராவிடர் ஆட்சியில் தமிழகம் பின் தங்கிவிட்டது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

9. துலுக்கர்களை சிறுபான்மையினர் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு என்று அரசாங்கம் பேச்சு எடுத்தாலே அபாய சங்கு வாசித்து, பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைவதாக அக்கறைபட்டுக் கொள்ளவேண்டும்.

10. இட ஒதுக்கீடு இந்தியரின் திறமையை குறைத்துவிட்டது, தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்று சொல்லத் தெரியவேண்டும். அதாவது, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற சமத்துவம் பேஷ தெரிந்திருக்க வேண்டும்

12. கடவுள் சேவை செய்யும் வகுப்பினர் குறிப்பாக பார்பனர் கடவுளுக்கும் மேல் என்று தெரிந்து கொண்டு அவர்கள் செயலில் குறிக்கிடாமல் இருக்க வேண்டும்.

13. கோவில் என்பது தனிமனிதரின் சொத்து அல்ல, அதற்கு என்றே ஆகம வரை முறை இருக்கிறது, அதை மதித்தாலே போதும், மாற்றம் வேண்டும் என்று எவராவது கேட்டால், அதெல்லாம் மாறப்படாது, இப்போது இருக்கும் நடைமுறையே சரி ஆண்டவனும் இதைதான் விரும்புகிறார். மாற்றினால் ஆண்டவனுக்கு ஆகாது, அடுக்காது, சுனாமி வரும், பூகம்பம் வெடிக்கும் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

14. தமிழில் அர்சனை என்று எதாவது மூதேவிகள் வந்து நின்றால் ஆண்டவனுக்கு எல்லா மொழிகளும் புரியும், தமிழென்ன? சமஸ்கிரதமென்ன? ஆனால் சமஸ்கிரத்தில் செய்வது தான் ஆண்டவனுக்கும் ஆச்சாராத்துக்கும் நல்லது, ஆண்டவனுக்கு பல மொழி தெரிந்தாலும், ஆண்டவனுக்கு அவன் பாஷையில் பேசினால் அவனுக்கு உகந்ததாக் இருக்கும் என்று எவரும் கேட்டால் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

15. இந்து மதத்துக்கு விரோதமாக எவரும் பேஷினால் அவர்களை இந்திய துரோகி, இன துரோகி என்று அடையாளம் காட்ட வேண்டும்.

16. மோடி போன்ற பெரிய மனிதர்கள் வருகை தரும் போது அது பற்றிய முழுகவரேஜ் செய்து அவர்களின் புகழை பரப்ப வேண்டும்.

17. வந்தேறிகள் என்று எவரும் பேஷினால், அப்படி யாரும் இல்லை, அது கிறித்துவ மிஷனரிகளின் சதி என்று சொல்லிவிட்டு திராவிடர்கள் தான் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தேறினார்கள் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

18. கோத்ரா ரயில் எரிப்பு பற்றி எவரும் கேட்டால், டீசல் டாங் வெடித்து ரயில் எரிந்ததாகவும் மோடியின் அரசு எவ்வளவோ போராடியும் முஸ்லிம்களை அல்லா அழைத்துக் கொண்டதை தடுக்க முடியவில்லை என்ற உண்மையை உறக்கச் சொல்லவும், இறைவன் மோடி மீது பழிச்சொல்லாக சொல்லப்படுவது, காங்கிரஸ் ஏஜெண்ட் தெகல்காவின் திட்டமிட்ட சதி என்று சொல்லத் தெரிய வேண்டும்.

19. ஆண்டி சோனியாவை ஆணடினோமெய்னோ, இத்தாலிகாரி, கிறித்துவர்களின் கைக்கூலி என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

20. லோக குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரிய பெரியவாளின் புகழை அகில லோகத்துக்கும் பரப்பவேண்டும்.

22. தேசம், தேசியம் தேசநலன் என்ற வார்த்தையை அவ்வப்போது உபயோக படுத்த வேண்டும்.

21. இதில் ஒன்றிரண்டை செய்தும், மேற்கண்ட எல்லாவற்றையும் போற்றி அடிவருடும் அடியார்களை கண்டு கொண்டு அவர்களை தட்டிக் கொடுத்து பேஷ வேண்டும்.

இன்னும் 100 எழுதாலம். யாருக்கு தேசவிசுவாசம் இருக்கிறது? இதையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள், எல்லோரும் நாத்திக நாயகரின் துர்போதனையிலும், திராவிட கம்யூனிசத்தின் கெட்ட சவகாசத்திலும் இருக்கிறார்களே என்று நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது, அலுப்பாக இருக்கிறது. கடைசியாக,

மேற்கண்ட இருபத்து சொச்சம் பாயிண்டையும் ஒருவர் செய்து தான் தேசாபிமானியாக இருக்க வேண்டுமா? இல்லை. இல்லை. ஒரு சுலப பாதை இருக்கிறது. எட்டாம் ஆம் நம்பர் நூலை வாங்கி மூன்று புறிகளாக்கி தோளைச் சுற்றி மார்பு வழியாக இடுப்பின் குறுக்கில் சுற்றிக் கொண்டால் போதும், மேலே சொன்னவை எல்லாம் தன்னாலேயே நடக்கும், அதன் பிறகு நீங்கள் தேசாபிமானிதான்.

உடனே அது இல்லாதவர்கள் எல்லோரும் அணிந்து தேசாபிமானி ஆகப்போகிறேன் என்கிறீர்களா? முப்புறி நூல் எல்லோரும் அணிய முடியுமா? அதற்கே உள்ள மகிமை தான் என்ன? துர்அதிர்ஷட வசமாக நினைத்த மாத்திரத்தில் எல்லோரும் அணிய முடியாது. குலம் கோத்திரம் இவை எல்லாம் இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் தேசாபிமனியாக முடியாது. பூனூல் அணிபவர் எவரோ அவர்களே தேசாபிமானிகள், மற்றவர்கள் தேசதுரோகிகள்.

நீங்கள் தேசதுரோகியா? தேசாபிமானியா?