Monday, March 17, 2008

பிரபலங்களின் விமர்சனம் : இந்த 'வியாதிக்கு' மருந்து கண்டுபிடிக்கவில்லை.

மூன்று வயதில் ஞானப்பால் குடித்து பாடினாராம் சம்பந்தர், இங்கு பிரபல எழுத்தாளன் என்ற போர்வையில் மனப்பால் குடித்துக் கொண்டு எவரையும் இகழமுடியும் என்பதை ஓனான்கள் கூட மெய்பித்து வருகின்றன.

முதலில் பிரபல எழுத்தாளன் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். நீ நீங்கள் ஒரு எழுத்தாளன் என்றால் எங்கேயோ படித்த 100 புத்தகங்ளின் மேட்டர்களை உங்கள் மொழிக்கு மாற்றி உங்களால் எழுத்தப்பட்டவையாக ஒரு பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு அல்லக்கைகளை தயார் செய்து, இவை எல்லாம் ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்டவை, பின்னவினத்துவமும் பினாயிலும் கலந்து எழுதப்பட்ட இத்தகைய சிலாக்கியங்கள் இதுவரை தமிழ் புதினாவில் வந்ததில்லை என்று அல்லக்கைகளை வைத்து ஊடகங்கள் தோறும் வதந்தி (வாந்தி அல்ல) எடுக்க வேண்டும். அதன் பிறகு நீ, நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளன் தான்

அதாவது "ஆகா, அவரது எழுத்துக்களைப் பார்த்தீர்களா ? ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும், அரேபியாவில் ஷேக்குகளும் படைக்கும் இலக்கியங்களெல்லாம் ஒத்தை ஆளாக நின்று படைத்துக் கொண்டு தமிழுக்கு தாடியாக ஆக்கி வைத்திருக்கிறார். இவரல்லவோ எழுத்தாளர். மற்றவர்கள் எல்லாம் எழுதுவது இலக்கியமா, பேனா பிடிப்பவன் எல்லாம் எழுத்தாளானா ? மாற்றி கொள்ளுங்கள் ஐயா, மாற்றிக் கொள்ளுங்கள். நவீனம், பெளதீகம்
இதெல்லாம் கலந்தும், கக்கா போவதிலும் வெரைட்டி கண்டுபிடித்து அதை கதையில் திணிக்க வேண்டும் அவனே எழுத்தாளன். அப்படி எழுதும் ஒரே எழுத்தாளுமையாளன் எங்கள் சோ அண்ட் 'சோவின்' வகையறா ஆளுதான் தான் என்று பரப்பிவிடவேண்டும்.

அப்படி ஒரு கூட்டம் சேர்த்துவிட்டால் அந்த எழுத்தாளான் தான் ஒரு பிரபலம் என்ற போர்வையில் எவர் மீது வேண்டுமானாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம்.

சிறுகதை எழுதுவது எப்படி என்று குறிப்பு கொடுத்து சிறுகதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க வேண்டுமா ?

"ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தேன், ஆழயோசித்தேன்...அந்த நேரத்தில் தலைக்கு மேல் காக்காய்..." என்று ஆரம்பித்து கோவணத்தை இறுக்கி முடிந்து கொண்டு எழுதுங்கள், உங்கள் பெயர் ஒரே வார இதழ்மூலம் பிரபலமாகிவிடும் என்று குறிப்பு எழுதி கிண்டல் அடிக்கலாம்

புதுக்கவிதை எழுதுபவர்களை கிண்டல் அடிக்க,

"மூளையைக் கசக்கினேன்,
மூக்கில் ஒழுகியது - அறிவூற்று
முக்கிப் பார்க்கும் போது
மூச்சை அடைத்தது - துர்நாற்றம்
"


சூப்பர் கவிதை, இதுப்போல் எழுதினால் போதும், கூடவே இயலாமை, புண்ணாக்கு, தலித்தியம், நாரசம், நரமாமிசம் எல்லாம் சேர்த்துக் கொண்டால் புதுசு புதுசு புதுக்கவிதைதான்

பின்பு

தொடர்கதை எழுத்தாளர்களை எப்படி கிண்டல் அடிப்பது,

"அவள் அவனைப் பார்த்தாள், அவன் அவளின் தொடையைப் பார்த்தான்..." தொடர்கதையை இப்படித்தானே தொடங்க வேண்டும்.

ஐயா சாமி தாவு தீறுதா?......பிரபலமெல்லாம் இப்படித்தான் வளரும் எழுத்தாளர்களை விமர்சனம் செய்யனும்

இந்த பிரபல எழுத்தாளர்களெல்லாம் முலைப்பால் குடித்தவுட்டு முக்கி விழுவது கூட எழுத்தாக மாறி புதினம் படைக்கிறதாம். மற்றவர்கள் எல்லோரும் மண்டிபோட்டு மண்டையை உடைத்து எழுதுறாங்க, போங்கடா நீங்களும் உங்க விசம விமர்சனங்களும்.

இதுக்கும் ஜெமோ எழுதிய நீங்களும் புதுக்கழுதை வளர்க்கலாம் என்பதற்கும் சம்பந்தம் இல்லை

Wednesday, March 12, 2008

என் கூட்டாளி தாத்தாச்சாரியார் - சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும்

வயசானவர்களுக்கு யார் நண்பராக இருக்க முடியும்? என் பால்ய சினேகிதன் தாத்தாசாரியார், தில்லை அந்தணர்களை அம்பலத்தில் ஏற்றி இருக்கார் பாருங்க.

'போலீஸாரையும் தேவாரம் பாட வந்த ஓதுவார்களை யும் நெய்யையும் எண்ணெயையும் வாரி ஊற்றி ஓடஓட விரட்டிய இந்தத் தீட்சிதர்கள் யார்?' என்று வேத மேதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார்,

வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டதுதான் ஆகமம். அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத்ர ஆகமம், வைகானஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்துக்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை, அதாவது வழிபாட்டு முறையை புறக்கணிச்சிட்டு, 'வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்'னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

தீட்சிதர்கள் என்ற சொல்லுக்கு தீட்சை பெற்றவர்கள் என்று அர்த்தம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பூஜை செய்யும் பட்டாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்கள் என்ற பட்டம் உண்டு. அவர்கள் ஆகம தீட்சை பெற்றவர்கள். ஆனால்,

இந்த தீட்சிதர்களோ வேத தீட்சை பெற்றவர்கள். அதாவது தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட வர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள் இந்த தீட்சிதர்கள். அவர்களுக்கு தாங்கள்தான் 'ஒரிஜினல் பிராமணர்கள்' என்ற எண்ணம் உண்டு.

இந்த தீட்சிதர்களது ஆகமம் அல்லாத வைதீக வழிபாடு சிதம்பரத்தில் மட்டு மல்ல, ஆவுடையார்கோயில், காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. ஆனால், அவர்களெல்லாம் சிதம்பரம் தீட்சிதர்களைப் போல இவ்வளவு தீவிரமாக இல்லை.

வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியதுதான் ஆகமம். ஆனால், வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் முதலானவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருவதுதான் தீட்சிதர்களின் வழிமுறை.

வேதம் சொன்ன யாகங்களில் முக்கியமானது பலிபொருட்கள். அதாவது மாடுகள், ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும். அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்றுவரை பசுக்களை பலி கொடுக்கும் சோம யாகம் முதலானவற்றைச் செய்துவர வேண்டும் என்பது ஐதீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 'வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில்தான் இருக்க வேண்டும்?' என்று சொல்லித்தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள். இன்னும் ஒரு சங்கதி தெரியுமோ?

சைவ ஆகமத்தில் லிங்க வழிபாடு மிகவும் முக்கிய மானது. ஆனால், வேத வழிபாட்டை பின்பற்றும் சிதம்பரத்தில் லிங்கத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. பெரும்பாலான பக்தர்கள் கோபப்படக் கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான் 'ஆகாச லிங்கமாக' இருப்பதாக... அதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். மக்களும் நம்பிவிட்டனர். லிங்கத்தைவிட நடராஜர்தான் அங்கே முக்கியம். 'நடராஜ மகாத்மியம்' என்றொரு புஸ்தகத்தை எழுதியிருக்கார் ஒரு தீட்சிதர். அதில், 'சிவபெருமான் நடனப் போட்டியில காளி தேவியைத் தோற்கடிக்க வழி தெரியாமல் தன் இடக்காலை உயரே தூக்கி சங்கடப்படுத்தினார். காளியும் வெட்கப்பட்டு, ஆட்டத்திறன் அதனால் பாதிக்கப்பட்டு, நடராஜர் ஜெயித்தார் என்று கதையே உண்டு.

அதாவது சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களின் கொள்கை. இவர்களைப் போய், 'தில்லைவாழ் அந்தணர்கள்'னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ...'' என்று பொருள் பொதியச் சிரித்தார் தாத்தாச்சாரியார்.

நன்றி:
கட்டுரை : ஜூனியர் விகடன் 12/மார்/2008
படம் : anyindian

Thursday, March 6, 2008

சுஜாதா மறைவு பாரதிக்கு இழப்பு !

தமிழ் என்றாலே 21 ஆம் நூற்றாண்டில் நினைவுக்கு வரும் பெயர் பாரதி, பாரதிப் போல் புலவன் இல்லை. பார்த்தனைப் போல் வீரன் இல்லை. அப்படிப்பட்ட பாரதிக்கு உலகம் தோறும் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறார்கள். பாரதி சங்கம் இல்லாத நாடே இல்லை.

கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகை தன் எழுத்தாற்றலால் கட்டிப் போட்ட ஒரே எழுத்தாளர் சுஜாதா மட்டுமே, மற்றவர்கள் எல்லோரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எழுதினார்கள். சுஜாதா மட்டுமே அவரது எழுத்தால் அடையாளம் காணப்பட்டார், பின்பு அவரது அடையாளமே இலக்கியம் என ஆயிற்று.

உலக தமிழார்வளர்கள் அனைவரும் பாரதி தமிழ்ச் சங்கம் போல், சுஜாதா அவர்களின் பெயரிலும் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து தமிழை வளர்க்கலாம். ஒரே ஒரு கஷ்டம் தான் பாரதி சங்கம் பாதியாக குறைந்து போகும். உவேசா ஐயர் முதல் - பாலச்சந்தர், எஸ்வேஷேகர் வரை பார்பனர்களின் தமிழ்ச் சேவை மிகப் பெரியது.

வாழ்க பாரதி புகழ் ! வாழ்க சுஜாதா அவர்களின் புகழ் !